சுந்தர் சி. இயக்கிய அரண்மனையில் ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அத்துடன் ஆண்ட்ரியா, ராய் லட்சுமி ஆகியோரும் நடித்திருந்தனர்.
விரைவில் அரண்மனை இரண்டாம் பாகத்தை சுந்தர் சி. இயக்க, குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் படத்தை தயாரிக்கிறது. இதில் நடிப்பதாக த்ரிஷா ட்வீட் செய்திருந்தார். அப்படியானால் ஹன்சிகா கிடையாதா என்று ஹன்சிகா ரசிகர்கள் கேட்டிருந்தனர்.
இந்நிலையில், அரண்மனை இரண்டாம் பாகத்தில் தான் நடிக்கயிருப்பதாக ஹன்சிகா தெரிவித்துள்ளார். தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை, ஆம்பள ஆகிய சுந்தர் சி. படங்களில் நடித்தவர் நான்காவது முறையாக அவரது இயக்கத்தில் நடிக்கயிருக்கிறார் என்பது முக்கியமானது.