பரதேசி, காவியத்தலைவன் படங்களில் நடித்த வேதிகாவுக்கு தமிழில் வாய்ப்புகளில்லை. மலையாளத்தில் சில படங்களில் நடித்தார்.
அடுத்த பிருத்விராஜுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கன்னடத்தில் சிவலிங்கா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பிரபுதேவா சமீபத்தில் தனது பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் அல்லவா. அவரது நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்களில் ஒன்றை வினோத் ஜெயராஜ் என்பவர் இயக்குகிறார்.
வருண் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் வேதிகாவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். கதை சுவாரஸ்யமாக இருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்றார் வேதிகா.
செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது.