விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘கத்தி’. இதில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. லைக்கா நிறுவனம் தயாரித்ததால் கத்தி படம் பல பிரச்சனைகளை சந்தித்து வெளியானது.
சில காலமாக படங்களை தயாரிக்காமல் இருந்த லைக்கா நிறுவனம் தற்போது படங்களை வாங்கி வெளியிடும் உரிமையை பெற்று வருகிறார்கள்.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘நானும் ரௌடிதான்’ படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கிறார்கள். இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்.
மேலும் தனுஷின் மற்றொரு தயாரிப்பான ‘விசாரணை’ படத்தையும் லைக்கா நிறுவனம் வாங்கியிருக்கிறது. ‘விசாரணை’ படத்தை வெற்றிமாறன் இயக்கியிருக்கிறார்.