காற்று வெளியிடை படத்தை அடுத்து சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து மணிரத்னம் படம் இயக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், இவர்கள் கூட்டணியில் அதிதி ராவ் இணைய இருப்பதாக செய்திகள் வெளியானது.<
/div>
தற்போது இப்படத்தின் தலைப்பு மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் முழுவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு ‘செக்கச்சிவந்த வானம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளனர்.
இப்படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். மேலும் இவர்கள் கூட்டணியில் அருண் விஜய்யும் இணைந்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 12ம் தேதி முதல் துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.

மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம், இசை – ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத், பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து, கலை – ஷர்மிஷ்டா ராய், உடைகள் வடிவமைப்பு – ஏகா லகானி, சண்டைப்பயிற்சி – திலிப் சுப்பராயன், ஒலிப்பதிவு – ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, ஒப்பனை – சிகை அலங்காரம் – செரினா டிக்ஸேரா, ஸ்டில்ஸ் – சி.எச்.பாலு, மக்கள் தொடர்பு – நிகில், டிசைன்ஸ் – கோபி பிரசன்னா, லைன் புரொட்யுசர் – கே.சின்னதுரை, கிரியேடிவ் புரொட்யுசர் – கிரண் & பிஜாய் நம்பியார், நிர்வாக தயாரிப்பாளர் – சிவா அனந்த், எழுத்து – மணி ரத்னம் & சிவா அனந்த், தயாரிப்பு – மணி ரத்னம் & சுபாஸ்கரன், இயக்கம் – மணி ரத்னம்